மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி.. அதிமுகவின் பொய் பரப்புரையை நிராகரித்த மக்கள்.. ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்துள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்திலிருந்து அதிமுக முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

Stalin thanked voters of Vellore Loksabha election 2019

இந்த நிலையில் மொத்த சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று விட்டார். அதற்கான சான்றிதழையும் அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி.

தாமதப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் தடுக்க முடியாது என்பது போல் உள்ளது திமுகவின் வெற்றி. திமுகவின் வெற்றிப் பயணம் மீண்டும் உறுதியாகிவிட்டது.

மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்ற அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றார் ஸ்டாலின். அவர் அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+