முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘வாரியம்’.. 3 எம்.எல்.ஏக்களும் நியமனம்!
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்திற்கு தலைவராக முதல்வர் ஸ்டாலினும், அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்களும் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில ஆலோசனை வாரியம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த இந்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2016ல் சட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 66-இல், ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு செயலர்கள்
மாநில அரசின் செயலாளர்களாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மை அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தலைமைச் செயலாளர், நிதித் துறை தலைமை செயலாளர், மனிதவள மேலாண்மை துறை அரசு செயலாளர், மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் என மொத்தம் 14 பேர் வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 எம்.எல்.ஏக்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வெங்கடாசலம், ரவி ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications