நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகளுக்கு செம நியூஸ்! பிரசாரத்திற்கு தளர்வுகள் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரசாரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது.

கொரோனா
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பிரசாரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

தளர்வுகள்
இப்போது வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரசாரங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம்
அதேநேரம் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் இதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை நிகழ்ச்சிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக உரிய அலுவலரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள்
நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications