"தரதரவென இழுத்த அதிகாரிகள்.. செந்தில் பாலாஜிக்கு தலையில் காயம்!" மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரபர
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமலாக்கத் துறை சோதனையின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு இதய நாளங்களில் அடைப்பு இருப்பதால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்தச் சூழலில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், "அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதுபோது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக வெளியான தகவல்களின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாகச் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க வந்தேன்.
அவர் சோர்வாக காணப்பட்டார். தான் கைது செய்யப்பட்ட போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும் தன்னை அதிகாரிகள் தரதரவென இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் சொன்னார். தனக்கு இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் இதனால் அதிகம் பேச முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனக்கு துன்பம் கொடுத்த அதிகாரிகள் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தும் கூட தன்னை மோசமாக நடத்தியதாக கூறினார். நெஞ்சு வலி என்று சொன்ன பிறகும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வாகனத்தில் ஏற்றி கீழே தள்ளினர் என்பது குறித்தும் தெரிவித்தார். அதிகாரிகள் தன்னை தாக்கியதாக கூறினார். இதனால் தலை மற்றும் காதின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
இந்த விவகாரத்தில் விசாரித்து உரிய முடிவு எடுக்கப்படும். எங்களுக்கு புகார் அடிப்படையிலும் விசாரணை நடத்த உரிமை உள்ளது. தானாக வந்து விசாரிக்கவும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் புகாரும் வந்தன. நாங்களும் செய்திகளை பார்த்தோம். அதன் அடிப்படையில் இப்போது வழக்கு விசாரணைக்காக இங்கே வந்துள்ளோம்.
அமைச்சர் என்று இல்லை.. யாருக்கு மனித உரிமை மீறல் என்றாலும் நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை ஊடகங்களில் வரவில்லை அவ்வளவு தான். அமைச்சர் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்வது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications