Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளர்த்த கடா மார்ப்பில் பாய்ந்தது.. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் தெரு நாய்கள் செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் ஜாலியாக வலம் வந்த தெரு நாய்கள், இன்று போலீசாரை கடித்து வைத்து எமனாக மாறத் தொடங்கியால், விரட்டி அடிக்கப்படுகின்றன. தடையின்றி ஜாலியாக உலா வந்த நாய்கள் விரட்டி அடிக்க போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் தெருநாய்கள் என்றால் பிரச்சனையாக மாறி உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு சிலர் உணவளிக்கிறார்கள்.. பலர் வெறுக்கிறார்கள்.. காரணம்..தெருநாய்கள் இரவில் நடந்த வருவோருக்கும், இருசக்கர வாகனத்தில் வருவோருக்கும் எமனாக இருப்பதுதான் காரணம். சென்னையில் இரவில் தெருக்களில் பயந்து பயந்து செல்லும் அளவிற்கு தெருநாய்கள் உக்கிரமாக சுற்றுகின்றன. நள்ளிரவு வேளைகளில் வேலைமுடிந்து வருவோர், உயிரை கையில் பிடித்தபடி பைக்கில் வரவேண்டிய நிலை இருக்கிறது.

Stray dogs banned from entering Chennai Police Commissioner s office

இதனிடையே அண்மையில் சென்னை ஆயிரம் விளக்கில் சிறுமியை அபாயகரமான வளர்ப்பு நாய் ஒன்று கடித்த விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வீடுகளில் நாய் வளர்க்க அனுமதி வாங்க வேண்டும் என்றும் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அண்மையில் உத்தரவிட்டார்.

இதனிடையே தெரு நாய்களை கூட மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று கருத்தடை செய்து அதன் விரீயத்தை குறைக்கும் செயல்களில் முன்பை விட தீவிரமாக இறங்கி உள்ளனர்,... நாய் கடியால் இறப்பு சம்பவங்கள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளனர்..

இதனிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல்வேறு மாடிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஜாலியாக வளம் வந்தன. அவற்றிற்கு பெயர் வைத்து, உணவும் அளித்து பராமரித்து வந்த போலீசார், அவற்றை செல்லப்பிராணியாக பார்த்து வந்தனர்.

யாரும் எளிதில் செல்ல முடியாத கட்டிடங்களுக்குள் சர்வ சாதாரணமாக உலா வந்த தெருநாய்கள், தங்கள் சேட்டையை காட்டியதால் இன்று விரட்டியடிக்கப்படுகின்றன. தெருநாய்கள் ஆரம்பத்தில் போலீசார் யாரையும் கடித்தது இல்லை. ஆனால்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் முகாமிட்டிருந்த நாய்கள் சில, அங்கு காவலுக்கு நிற்கும் போலீசாரையே கடித்து வைத்துவிட்டன.இதில் 2 பெண் போலீசார் காயம் அடைந்தனர். ஒரு அமைச்சு பெண் ஊழியரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் முகாமிட்டிருந்த நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி நாய் பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடித்து சென்றனர். அந்த நாய்களை கருத்தடை செய்து மீண்டும் கமிஷனர் அலுவலகத்திலேயே கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் நாய்கள் வழக்கத்தைவிட தற்போது நிலைமை மோசமானதால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் நாய்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கமிஷனர் ஆபிஸில் நாய்களை விரட்டி அடிப்பதற்காக ஆயுதப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கையில் லத்தியோடு சுற்றுகிறார்கள. வாசலில் துப்பாக்கியுடன் காவல் காக்கும் பெண் போலீசாரும் நாய்களை நுழைய விடாமல் தடுப்பதுடன் விரட்டியும் அடிக்கிறார்கள். அச்சுறுத்தும் வகையில் இருக்கும் நாய்கள் கமிஷனர் ஆபிஸ் வளாகத்திற்குள் நுழைய முடியாமல் தற்போது வெளியில் தான் உலா வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+