தேர்தல் வந்துருச்சு டும் டும் டும்.. நாளை புதுக் கட்சி பிறக்கப் போகுது.. பனங்காட்டுப் படை!
சென்னை: தமிழகத்தில் நாளை புதிதாக ஒரு கட்சி பிறக்கவுள்ளது. அக்கட்சியின் பெயர் பனங்காட்டுப் படை.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி பிறந்தபோது இப்படியும் ஒரு கட்சிப் பெயரா. திராவிடம் இல்லை ஆரியம் இல்லை காரீயம் இல்லை என்று பலரும் முனுமுனுத்தனர். ஆனாலும் கமல்ஹாசன் கண்டு கொள்ளவில்லை. இப்போது மக்களின் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொண்டு விட்டது மக்கள் நீதி மய்யம்.
அந்த அடிப்படையில் இப்போது பனங்காட்டுப்படை என்ற புதிய பெயரில் வித்தியாசமான பெயருடன் தமிழகத்தைக் கலக்க வருகிறது இன்னொரு கட்சி. நாளை இது உதயமாகிறது.

குவியல் குவியலாக கட்சிகள்
தமிழகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கட்சிகளும், அமைப்புகளும் உள்ள நிலையில் நாளை சேலத்தில் புதிதாக ஒரு கட்சி உதயமாகிறது. இதைத் தொடங்குபவர் சுபாஷ் பண்ணையார்.

சுபாஷ் பண்ணையார் கட்சி
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் தென்மாவட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்தவர் மறைந்த வெங்கடேஷ் பண்ணையார். அவரது மறைவுக்கு பின்பு சுபாஷ் பண்ணையார் தனது அண்ணன் வெங்கடேஷ் பண்ணையார் இடத்திற்கு வந்தார்.

அரசியல்வாதி
இதுவரை நாடார் இனச்சங்கங்கள் மற்றும் அமைப்பு நடவடிக்கைகளில் மட்டும் தீவிர ஈடுபாடு காட்டி வந்த சுபாஷ் பண்ணையார் புதிய கட்சியை நாளை சேலத்தில் தொடங்குகிறார்.

சேலத்தில் ஏன்
பெங்களூரு சாலையில் உள்ள வரலட்சுமி மஹாலில் கட்சி துவக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்மண்டலத்தில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தில் கட்சியை தொடங்குவதை விட்டு கொங்குமண்டலமான சேலத்தில் சுபாஷ் பண்ணையார் கட்சி தொடங்குவது புரியாத புதிராகவே உள்ளது.

பனை படை
சுபாஷ் பண்ணையாரின் புதிய கட்சிக்கு 'பனங்காட்டுப்படை' கட்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கொடியில் பனை மர உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடி ஊதா, பச்சை வண்ணத்தில் உள்ளது. எது எப்படியோ மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் பனங்காட்டுப்படை போராடினால் அது மகிழ்ச்சியே.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications