இன்போசிஸ் தொடங்க.. நாராயண மூர்த்திக்கு ரூ 10 ஆயிரம் கடனாக கொடுத்த சுதா மூர்த்தி.. சுவாரஸ்யம்
சென்னை: இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்க தனது கணவர் நாராயண மூர்த்தி ரூ 10 ஆயிரத்தை மனைவி சுதா மூர்த்திதான் கடனாக கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியுமா?
இன்போசிஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி புனேவில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை 22 நாடுகளில் உள்ளது.

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது. இந்த நிறுவனத்தை நாராயண மூர்த்தி, நந்தன் நீல்கேனி, என்.எஸ்.ராகவன், கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சிபுலால், தினேஷ், அசோக் அரோரா ஆகிய 6 பேர தொடங்கினர். இதன் ஆண்டு வருமானம் ரூ149,468 கோடியாகும்.
கடந்த ஜூன் மாதம் வரை இந்த நிறுவனத்தில் 3.36 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இத்தகைய இந்த நிறுவனம் தொடங்க நாராயணமூர்த்திக்கு அவருடைய மனைவி சுதா மூர்த்திதான் ரூ 10000 கடனாக கொடுத்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு அந்த காலத்தில் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து உயர்கல்வி படித்து தனித்துவமிக்க பெண்ணாக உருவெடுத்தவர் சுதா மூர்த்தி. 1960 ஆம் ஆண்டுகளில் இவர் பயின்ற பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வந்த ஒரே பெண் இவர் மட்டும்தான். மேலும் சுதா மூர்த்தி பொறியியல் தேர்வையும் படித்து முடித்தார். பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெல்கோவில் முதல் பெண் பொறியாளராக பணியாற்றினார்.
சுதா மூர்த்தி பத்மபூஷன் விருது பெற்றவர். இவர் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். ஆனால் இன்போசிஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நாராயணமூர்த்தி உருவாக்குவதற்கு சுதா மூர்த்தி கடனாக வழங்கிய ரூ 10 ஆயிரம் தான் அடிப்படையாக அமைந்தது. உலகளவில் முதலீட்டாளர்களில் ஒருவராக சுதா மூர்த்தி திகழ்கிறார்.
பாலின பாகுபாடு நிறைய காலத்திலேயே சாதித்த தன்னை போல் ஒருவரைத்தான் திருணம் செய்து கொள்ள வேண்டும் என சுதா நினைத்திருந்தார். அந்த வகையில் நாராயண மூர்த்தி சுதாவுக்கு அறிமுகமானார். இருவரும் புத்தகங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
சாதாரண ஊழியராக பணிக்கு சேர்ந்த நாராயண மூர்த்தி தனது மனைவி சுதாவின் பிறந்த நாளின் போது தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்த தகவலை வீட்டில் தெரிவித்தார். அப்போது சுதா எந்த அதிர்ச்சியும் அடையாமல் இன்போசிஸ் என்ற புதிய தொழிலை தொடங்க நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக இருந்தார்.












Click it and Unblock the Notifications