ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே "மர்ம சூட்கேஸ்" எச்சரிக்கை ஒலியால் பதற்றம்! காரில் இருந்து வீசியது யார்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பாக மர்ம நபர்கள் சூட்கேசை வீசி சென்றுள்ளனர். சி.ஆர்.பி.எப் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்க வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி உயிர் நீத்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இந்த நினைவிடம் உள்ளது. நினைவிடம் முன்பாக செல்லும் சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்த பகுதியில் இன்று மர்ம நபர்கள் சூட்கேசை வீசிச் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் காரை நினைவிடம் முன்பாக நிறுத்தி விட்டு, சூட்கேசை எடுத்து வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீசார், மர்ம நபர்கள் வீசிச்சென்ற சூட்கேசை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அச்சம் அடைந்த பாதுகாப்பு படையினர், ஸ்ரீபெரும்பதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து விட்டு சூட்கேசை யாரும் நெருங்கிவிடாத படி பேரிகார்டு வைத்து மறித்துள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் அந்த சூட்கேசில் என்ன உள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நினைவிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சூட்கேசை வீசிய மர்ம நபர்கள் குறித்தும் அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications