Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரக்குலையே நடுங்கி போச்சு.. ஓனர் சடலத்தை தேடி அலைந்த கன்று.. கதறி கதறி கண்ணீர்.. நொறுங்கிய இதயம்

வளர்த்தவர் சடலத்தை சுற்றி சுற்றி வந்து கன்று ஒன்று கதறி அழுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓனர் உயிரிழந்துவிட்ட நிலையில், வளர்ப்பு கன்று ஒன்று அவரது சடலத்தையே சுற்றி சுற்றி நின்று அழும் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.

2 வருடங்களுக்கு முன்பு உபியில் ஒரு சம்பவம் நடந்தது.. கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங்.

இவர் 12 வருடங்களுக்கு முன்பு, தெருவோரத்தில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வந்து சிகிச்சையளித்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

 ஜெயா பாவம்

ஜெயா பாவம்

அந்த நாய்க்கு ஜெயா என்று பெயர் வைத்தார்.. ஒருநாள் அனிதா ராஜ் சிங், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்... ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அனிதா ராஜ் சிங்கின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது... அனிதாவின் மரணம் அவரது குடும்பத்தை துக்கத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் ஆசையாக வளர்த்து வந்த ஜெயா குரைத்துக்கொண்டே அழ ஆரம்பித்தது..

சமாதானம்

சமாதானம்

நேரம் ஆக ஆக ஜெயாவின் அழுகை அதிகமாகி கொண்டே போனது.. இதனால், துக்க வீட்டில் இருந்தவர்கள், ஜெயாவை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.. அங்கிருந்து ஜெயாவை நகர்த்தவும் முடியவில்லை.. அழுகையையும் நிறுத்த முடியவில்லை.. அழுது கொண்டே இருந்த ஜெயா, பிறகு திடீரென அந்த குடியிருப்பின் 4வது மாடிக்கு ஓடியது.. அங்கிருந்து சத்தமாக அழுதுகொண்டே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது..

 ஓ மை காட்

ஓ மை காட்

இதை பார்த்து பதறிப்போன குடும்ப உறவினர்கள் படுகாயமடைந்த ஜெயாவை, அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், ஜெயா ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இந்த சம்பவம் அப்போது உபியையே அதிர வைத்தது.. அந்தவகையில், இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. வெளிமாநிலம் போல தெரிகிறது.. கன்றுவின் வீடியோ மட்டும் வைரலாகி வருகிறது..

சடலங்கள்

சடலங்கள்

இந்த கன்றுவை பாசமாக வளர்த்தவர் இறந்துவிட்டார்.. அதனால், பரந்தவெளி ஒன்றில் அவரது சடலத்தை உறவினர்களும் மற்றவர்களும் தீவைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதே இடத்தில் ஆங்காங்கே மேலும் சிலரது சடலங்கள் எரியூட்டப்பட்ட வைக்கப்பட்டுள்ளன.. அந்தந்த இடங்களில் கும்பல் கும்பலாக சம்பந்தப்பட்ட உறவினர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.. இந்த கன்று வேகமாக அந்த திறந்த வெளி பகுதிக்கு வருகிறது..

 ஓனர் + கதறல்

ஓனர் + கதறல்

நிறைய சடலங்கள் ஆங்காங்கே இருப்பதால், ஓனர் சடலம் எது என்று தேடுகிறது.. கடைசியில் சரியாக கண்டுபிடித்து, ஓனர் சடலத்தின் அருகில் சென்று நின்று, கதறி கதறி அழுகிறது.. ஓனரை முகர்ந்து முகர்ந்து பார்த்து மறுபடியும் அழுகிறது. வளர்த்த கன்று என்பதால், அதனை அங்கிருந்த உறவினர்களும் யாரும் விரட்டியடிக்கவில்லை.. அவர்களும் சேர்ந்து அழுகிறார்கள்.. சில சமயங்களில், மனிதர்களைவிட சில மிருகங்களே பாசத்தில் மிஞ்சிவிடுகின்றன.. மிருகங்களிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்வது இன்னமும் நிறையவே இருக்கிறது.. வேறென்ன சொல்ல?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+