தட்கல் புக்கிங் விடுங்க.. ஸ்லீப்பர் டிக்கெட் வாங்கி.. ஏசி கோச்சில் போகலாமா? இப்படியொரு வசதி? சூப்பர்
சென்னை: ஏசி கோச்சில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா? ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை வைத்து கொண்டு, ஏசி கோச்சில் பயணிக்க முடியுமா?
சமீபகாலமாகவே ரயில்வே சேவையின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. நாளுக்கு நாள் நகரங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

சலுகைகள்: அதனால்தான், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும, இந்தியன் ரயில்வே பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில் சமீபத்தில்கூட, ஒரு சலுகை வெளியாகியிருந்தது. அதாவது, ரயிலில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொண்டு ஏசி கோச்சிலும் பயணிக்கலாம்.
இதற்கு 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது "தானியங்கு மேம்படுத்தல்" (Auto-upgrade) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இப்படி செய்வதால், மேல் வகுப்பு இருக்கை அல்லது பெர்த் காலியாக இருந்தால், பயணிகளின் டிக்கெட் தானாகவே மேம்படுத்தப்படும்.
புதிய அறிவிப்பு: இதற்கு முன்பு விமானங்களில் இப்படியொரு சேவை இருக்கிறது.. அதாவது, எகானமியில் இருந்து வணிக வகுப்பிற்கு டிக்கெட் மேம்படுத்தப்பட்டது போலவே, ரயில்களிலும் டிக்கெட்டுகள், ஸ்லீப்பர் கோச்சிலிருந்து ஏசி கோச்சாக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, இப்படியொரு சலுகையை இந்தியன் ரயில்வே, இலவசமாகவே வழங்கியிருக்கிறது.
ஏசி கோச்சில் இன்னும் பல வசதிகள் இருக்கின்றன.. ஆனால், பெரும்பாலானோர் அதை பற்றி அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறார்கள்.. உதாரணமாக ஏசி கோச்சில் பயணம் செய்யும்போது, சில சமயங்களில் அதிகமாக குளிர் எடுக்கும்.. இதுபோன்ற நேரங்களில் கோச் அட்டென்ட்டரிமிருந்து, கூடுதலாக எக்ஸ்ட்ரா போர்வையை நாம் வாங்கி கொள்ளலாம்.. இதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்..
ரயில்வே அமைச்சகம்: ரயில் பயணத்தின்போது, குளிர்வதுப்போல உணர்ந்தால், உடனே அங்குள்ள உதவியாளரிடம் கூடுதல் போர்வை கேட்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. எனவே, கூடுதல் போர்வையை நீங்கள் தயக்கமின்றி தாராளமாக கேட்கலாம், எக்ஸ்ட்ரா போர்வை இருந்தால் அவரும் கட்டாயம் உங்களுக்கு வழங்குவார்.
ஒருவேளை உதவியாளர் உங்களுக்கு போர்வையை வழங்க மறுத்தால் நீங்கள் 138 என்கிற எண்ணில் அழைத்து புகார் தரலாம்.. அதேபோல் உங்களது செல்போனிலிருந்து 91-9717680982 என்ற நம்பருக்கு SMS அனுப்பியும் உங்களின் புகாரை தெரிவிக்கலாம். "@RailMinIndia" என்ற ட்வீட் மூலமும் பயணிகள் தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications