தட்கல் புக்கிங் விடுங்க.. ஸ்லீப்பர் டிக்கெட் வாங்கி.. ஏசி கோச்சில் போகலாமா? இப்படியொரு வசதி? சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசி கோச்சில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா? ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை வைத்து கொண்டு, ஏசி கோச்சில் பயணிக்க முடியுமா?

சமீபகாலமாகவே ரயில்வே சேவையின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. நாளுக்கு நாள் நகரங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

Indian Railway

சலுகைகள்: அதனால்தான், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும, இந்தியன் ரயில்வே பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில் சமீபத்தில்கூட, ஒரு சலுகை வெளியாகியிருந்தது. அதாவது, ரயிலில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொண்டு ஏசி கோச்சிலும் பயணிக்கலாம்.

இதற்கு 1 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது "தானியங்கு மேம்படுத்தல்" (Auto-upgrade) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இப்படி செய்வதால், மேல் வகுப்பு இருக்கை அல்லது பெர்த் காலியாக இருந்தால், பயணிகளின் டிக்கெட் தானாகவே மேம்படுத்தப்படும்.

புதிய அறிவிப்பு: இதற்கு முன்பு விமானங்களில் இப்படியொரு சேவை இருக்கிறது.. அதாவது, எகானமியில் இருந்து வணிக வகுப்பிற்கு டிக்கெட் மேம்படுத்தப்பட்டது போலவே, ரயில்களிலும் டிக்கெட்டுகள், ஸ்லீப்பர் கோச்சிலிருந்து ஏசி கோச்சாக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, இப்படியொரு சலுகையை இந்தியன் ரயில்வே, இலவசமாகவே வழங்கியிருக்கிறது.

ஏசி கோச்சில் இன்னும் பல வசதிகள் இருக்கின்றன.. ஆனால், பெரும்பாலானோர் அதை பற்றி அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறார்கள்.. உதாரணமாக ஏசி கோச்சில் பயணம் செய்யும்போது, சில சமயங்களில் அதிகமாக குளிர் எடுக்கும்.. இதுபோன்ற நேரங்களில் கோச் அட்டென்ட்டரிமிருந்து, கூடுதலாக எக்ஸ்ட்ரா போர்வையை நாம் வாங்கி கொள்ளலாம்.. இதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்..

ரயில்வே அமைச்சகம்: ரயில் பயணத்தின்போது, குளிர்வதுப்போல உணர்ந்தால், உடனே அங்குள்ள உதவியாளரிடம் கூடுதல் போர்வை கேட்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. எனவே, கூடுதல் போர்வையை நீங்கள் தயக்கமின்றி தாராளமாக கேட்கலாம், எக்ஸ்ட்ரா போர்வை இருந்தால் அவரும் கட்டாயம் உங்களுக்கு வழங்குவார்.

ஒருவேளை உதவியாளர் உங்களுக்கு போர்வையை வழங்க மறுத்தால் நீங்கள் 138 என்கிற எண்ணில் அழைத்து புகார் தரலாம்.. அதேபோல் உங்களது செல்போனிலிருந்து 91-9717680982 என்ற நம்பருக்கு SMS அனுப்பியும் உங்களின் புகாரை தெரிவிக்கலாம். "@RailMinIndia" என்ற ட்வீட் மூலமும் பயணிகள் தங்களின் புகாரை பதிவு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+