Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதன்முறையாக.. நாட்டிலேயே டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில்.. சென்னையில் எப்போ வருது தெரியுமா? குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்படுகிறது... இதுகுறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது...

Super News about Chennai Driverless Metro Metro Rail and When will cmrl first Driverless Metro train in chennai

அன்று முதல் இன்றுவரை, சென்னையில் மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்தபடியே வருகிறது. அதனால்தான், மெட்ரோ சேவையின் விரிவாக்கமும் துரிதமாகி வருகிறது.

அறிமுகம்: தற்போது 63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடந்து கொண்டிருக்கின்றன... மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெற போவதாகவும், இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. இது வரப்போகும் 2025ம் ஆண்டு ஆகஸ்டு முதல் இயக்கப்பட உள்ளது உள்ளதாகவும், 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பது மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி வருகிறது.

3 பெட்டிகள்: மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த டிரைவரில்லாத மெட்ரோ ரயில்கள் வாங்கப்பட உள்ளது.

இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டுவிடும் என்றும் , ஒரு வருட சோதனைகளுக்கு பிறகே பொது பயன்பாட்டிற்கு தயாராகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

பூந்தமல்லி: அதாவது, பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன் முதலாக ஓட்டுநர் இல்லாத ரயில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுடன், அதிநவீன வசதிகளுடன் வரப்போகும் இந்த மெட்ரோவானது, ஆகஸ்ட் மாதமே வரப்போவதும், மிகுந்த எதிர்பார்பபை பயணிகளிடம் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+