பேரறிவாளன் ஜாமீன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் சொல்லி இருப்பது என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ள நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

Recommended Video
32 ஆண்டுகள் சிறைவாசம்.. பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
- பேரறிவாளன் கல்வி தகுதி, 30 ஆண்டுகால சிறைவாசம், சிறை நன்னடத்தை, உடல்நிலை பாதிப்பு அடிப்படையில் ஜாமீனில் விடுதலை செய்கிறோம்.
- மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெறும் கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்கிற மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விசாரிக்கப்படும்.
- பரோலில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் பேரறிவாளன் நடத்தையில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை
- பேரறிவாளன் 32 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார் என்கிற வாதம் ஏற்கப்படுகிறது.
- பேரறிவாளன் ஜாமீன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் தெரிவிக்க வேண்டும்.
- பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது
- 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் பேரறிவாளனுக்கு ஜாமீன் அவசியம்
- பேரறிவாளனுக்கான நிபந்தனைகள் குறித்து விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும்
- பேரறிவாளன் வாரந்தோறும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.












Click it and Unblock the Notifications