வைல்டு கார்டில் சென்றால் வச்சு செய்வேன்.. செல்லாவிட்டாலும் "இதை" செய்வேன்.. சுரேஷ் சக்ரவர்த்தி
சென்னை: மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மிகவும் சவாலான போட்டியாளராக இருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை அனிதா சம்பத்திடம் சண்டையிட்டு கொண்டிருந்தார்.
அது போல் பாலா தனது மகன் போல் நினைத்ததால் அவரிடம் அன்பாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரும் அனிதா சம்பத்தும் இணைந்து ஏய் ஏய் சின்ன மச்சான் பாடலுக்கு கலக்கல் நடனமாடினார்கள்.

கேப்ரி
இருவரும் பாடலை உள்வாங்கி ஆடியது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. அதிலும் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வயதிலும் ஆடியது கண்களுக்கு விருந்தாகவே இருந்தது. இவர் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை தாத்தா தாத்தா என அழைத்த கேப்ரி அழுதார். அது போல் அர்ச்சனாவும் கண்ணீர் விட்டார்.

ரசிகர்கள்
இவர் வெளியேறியதற்கு பின்னால் ஏதேனும் சூழ்ச்சி நடந்திருக்கலாம் என ஒரு சிலர் சந்தேகத்தை கிளப்பினார்கள். இந்த நிலையில் அவர் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர்.

அளவு
அதில் கடந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக வனிதா சென்றது போல் உங்களை அழைத்தால் நீங்களும் செல்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி கூறுகையில் கண்டிப்பாக செல்வேன். நீங்கள் என் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பீர்கள் என நினைக்கவில்லை.

சுரேஷ் சக்ரவர்த்தி
ஆனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன். இனி தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளேன் என சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போல் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியேயும் நிகழ்ச்சி களைகட்டும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications