மகாபாரதம் காலத்திலேயே வாடகைத் தாய் முறையா? திருச்சி கோயில் சிற்பம் சொல்லும் சேதி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழங்காலத்திலேயே வாடகைத் தாய் என்ற முறை இருந்ததற்கான சான்றாக சிற்பம் ஒன்று வைரலாகி வருகிறது.

பொன், பொருள், காசு, பணம் என அனைத்திலும் சிறந்த செல்வம் குழந்தை செல்வம். அந்த குழந்தை செல்வம் பலருக்கு எளிதாக கிடைக்கிறது, சிலருக்கு தவம் இருந்தால் கிடைக்கிறது.

இன்னும் சிலருக்கோ தவம் இருந்தாலும் கிடைப்பதில்லை. இயற்கையாக குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் நவீன முறைகள் வந்துள்ளன.

வாடகைத் தாய்

வாடகைத் தாய்

இந்த வாடகைத் தாய் முறைக்கு பல்வேறு விதிகளை மருத்துவத் துறை வகுத்துள்ளது. அதாவது இதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும் குழந்தை பெற்றுக் கொடுப்பதை உன்னதமான செயலாக்கவும் இந்த விதிகள் வழங்கப்பட்டுள்ளன. விஞ்ஞான வளர்ச்சிகேற்ப அறிவியலும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன.

பழங்காலத்தில் புராண கதையிில்

பழங்காலத்தில் புராண கதையிில்

ஆனால் பழங்காலத்திலேயே அதாவது புராண காலத்திலேயே வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் டெக்னிக் இருந்துள்ளது கோயில் சிற்பங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பிரவீன் மோகன் என்பவர் தமிழ் பால் உள்ள ஈர்ப்பாலும் வரலாறு, புராணங்கள், பாரம்பரிய வைத்தியங்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

வாடகைத் தாய் முறை குறித்து

வாடகைத் தாய் முறை குறித்து

இந்த வாடகைத் தாய் முறை குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சிற்பத்தை பார்த்தேன். ஒரு பெண் வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஆண் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார். முதலில் இந்த சிற்பத்தை பார்த்த போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதாக நினைத்தேன்.

வாடகைத் தாய் முறை குறித்து

இந்த வாடகைத் தாய் முறை குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சிற்பத்தை பார்த்தேன். ஒரு பெண் வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஆண் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார். முதலில் இந்த சிற்பத்தை பார்த்த போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதாக நினைத்தேன்.

வயிறு தட்டையாக இருந்தது

வயிறு தட்டையாக இருந்தது

ஆனால் வயிற்றை பார்த்தால் தட்டையாக இருக்கிறது. அப்படியென்றால் அந்த பெண்ணின் கர்ப்பப்பைக்கு அந்த ஆண் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான பதில் மகாபாரதத்தில் இருக்கிறது. கிருஷ்ணருடைய அண்ணன் பலராமனின் பிறப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது.

பலராமன்

பலராமன்

அதாவது கிருஷ்ணரின் தாயின் கருப்பையில் பலராமர் வளர்ந்து வந்தார். அந்த கருவை வெளியே எடுத்து அதை வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து வளர்த்தார்கள் என சொல்லப்படுகிறது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி அண்மையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த முறை குறித்து தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+