மகாபாரதம் காலத்திலேயே வாடகைத் தாய் முறையா? திருச்சி கோயில் சிற்பம் சொல்லும் சேதி என்ன?
சென்னை: பழங்காலத்திலேயே வாடகைத் தாய் என்ற முறை இருந்ததற்கான சான்றாக சிற்பம் ஒன்று வைரலாகி வருகிறது.
பொன், பொருள், காசு, பணம் என அனைத்திலும் சிறந்த செல்வம் குழந்தை செல்வம். அந்த குழந்தை செல்வம் பலருக்கு எளிதாக கிடைக்கிறது, சிலருக்கு தவம் இருந்தால் கிடைக்கிறது.
இன்னும் சிலருக்கோ தவம் இருந்தாலும் கிடைப்பதில்லை. இயற்கையாக குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் நவீன முறைகள் வந்துள்ளன.

வாடகைத் தாய்
இந்த வாடகைத் தாய் முறைக்கு பல்வேறு விதிகளை மருத்துவத் துறை வகுத்துள்ளது. அதாவது இதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும் குழந்தை பெற்றுக் கொடுப்பதை உன்னதமான செயலாக்கவும் இந்த விதிகள் வழங்கப்பட்டுள்ளன. விஞ்ஞான வளர்ச்சிகேற்ப அறிவியலும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன.

பழங்காலத்தில் புராண கதையிில்
ஆனால் பழங்காலத்திலேயே அதாவது புராண காலத்திலேயே வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் டெக்னிக் இருந்துள்ளது கோயில் சிற்பங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பிரவீன் மோகன் என்பவர் தமிழ் பால் உள்ள ஈர்ப்பாலும் வரலாறு, புராணங்கள், பாரம்பரிய வைத்தியங்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

வாடகைத் தாய் முறை குறித்து
இந்த வாடகைத் தாய் முறை குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சிற்பத்தை பார்த்தேன். ஒரு பெண் வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஆண் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார். முதலில் இந்த சிற்பத்தை பார்த்த போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதாக நினைத்தேன்.
வாடகைத் தாய் முறை குறித்து
இந்த வாடகைத் தாய் முறை குறித்து அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரு சிற்பத்தை பார்த்தேன். ஒரு பெண் வலது காலை தூக்கி நின்று கொண்டிருக்கிறார். ஒரு ஆண் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் எதையோ வைக்க முயற்சிக்கிறார். முதலில் இந்த சிற்பத்தை பார்த்த போது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதாக நினைத்தேன்.

வயிறு தட்டையாக இருந்தது
ஆனால் வயிற்றை பார்த்தால் தட்டையாக இருக்கிறது. அப்படியென்றால் அந்த பெண்ணின் கர்ப்பப்பைக்கு அந்த ஆண் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான பதில் மகாபாரதத்தில் இருக்கிறது. கிருஷ்ணருடைய அண்ணன் பலராமனின் பிறப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது.

பலராமன்
அதாவது கிருஷ்ணரின் தாயின் கருப்பையில் பலராமர் வளர்ந்து வந்தார். அந்த கருவை வெளியே எடுத்து அதை வேறு ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து வளர்த்தார்கள் என சொல்லப்படுகிறது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி அண்மையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த முறை குறித்து தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications