கிளாம்பாக்கம் வரட்டுமே.. தாம்பரம் டூ ஸ்ரீபெரும்புதூர் ரூட்டும் ரெடி.. துள்ளி குதிக்கும் "முடிச்சூர்"
சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில், 393 கோடி செலவில் சிஎம்டிஏ-வால் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் தயாராகி உள்ளது..
பிரமாண்டமான முறையில் இந்த கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.. "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

திறப்பு விழா: எப்படியும் ஜூலை மாதத்துக்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது.. இதனிடையே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்துள்ள அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டவுடன் ஏற்படக்கூடிய செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
கூட்டம்: ஆனாலும், சென்னையில் பெய்த மழையால், கிளாம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது.. இது தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்..
முக்கியமாக, இந்த பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் அதாவது, ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் ஜிஎஸ்டி சாலையில், நெருக்கடிகள் ஏற்படாதவாறு பல மாற்றங்களை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது..

ஐடி கம்பெனிகள்: இதையடுத்து, தாம்பரம் - முடிச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையை விரிவாக்கும் பணிகள் துரிதமாகி வருகின்றன.. ஸ்ரீபெரும்புதூரில் நிறைய ஐடி கம்பெனிகளும், தொழிற்நிறுவனங்களும் பெருகிவிட்டதால், டிராபிக்கும் அதிகமாகி வருகிறது. அதனால்தான், ரூ.95 கோடி செலவில் தாம்பரம் - முடிச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையை 2 வழிச்சாலையில் இருந்து, 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் கையில் எடுக்கப்பட்டன. அவைகள் இப்போது 60 சதவீதம் முடிந்துவிட்டதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாதவாறு, இரவு நேரங்களில் மட்டும், அதுவும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே இந்த பணிகுள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
பெருத்த நம்பிக்கை: மொத்தம் 28 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் 13 கி.மீ. தூரத்திற்கு 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.. மிச்சமிருக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.. இந்த சாலை திறக்கப்பட்டுவிட்டால், ஜிஎஸ்டி சாலையிலும் சென்னை - பெங்களூர் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறைந்துவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications