தமிழ் மொழி நீக்கம்... அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் மெஷினில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில் இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாவும் புகார் எழுந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களின் வருகை பதிவை கண்காணிக்க விரல் நேரகை வருகை பதிவு (பயோமெட்ரிக்) முறை தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை முயற்சியாக ஆசியர்களுககு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் அதாவது இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆசியர்கள் காலையில் பள்ளிக்கு வந்த உடனேயே தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பபட்டு இருக்கும் பயோ மெட்ரிக் மெஷினில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து தங்களது வருகை நேரத்தை உறுதி செய்வார்கள். இது அன்றாடம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன்மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை அந்த எந்திரம் பதிவு செய்துவிடும். பின்னர் ஆதார் எண்களில் கடைசி 8 எண்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோல் பள்ளி நேரம் முடிந்து வெளியே செல்லும்போதும் கைரேகையை பதிவு செய்வார்கள்.
இதற்காக அந்த எந்திரத்தில் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் திரையில் காண்பித்து வந்ததது. இந்நிலையில் அந்த எந்திரத்தில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாகவம், இதற்கு பதிலாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தற்போது இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே தெரிகிறது என்று புகார் எழுந்துள்ளது.. இதனிடையே இந்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மீண்டும் தமிழ் எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications