10ம் வகுப்பு ஃபெயிலா? கவலைய விடுங்க துணைதேர்வு தேதிகள் அறிவிப்பு.. மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவ-மாணவிகள் துணைத்தேர்வுக்கு மே 16ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு ஜுலை 2ம் தேதி முதல் ஜுலை 8 ம் தேதி வரை பாடவாரியாக தேர்வுகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 8 ம்தேதி முடிவடைந்தது. முறைகேடுகள் ஏதுமின்றி அமைதியாக இந்த தேர்வுகள் நடந்து முடிந்தன

10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 பேர் மாணவிகள். 4 லட்சத்து 47 ஆயிரத்த 2013 பேர் மாணவர்கள்.
நேற்றைய தினம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சியடைந்தனர். இது 91.55 சதவீத தேர்ச்சியாகும். மாணவிகளை பொறுத்தமட்டில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேர் (94.53 சதவீதம்) தேர்ச்சியடைந்தனர். மாணவிகளை பொறுத்தமட்டில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் (88.58 சதவீதம்) தேர்ச்சியடைந்தனர். மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் தேர்ச்சியடைந்தனர்.
இதில் தேர்ச்சியடையாத மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு வரும் 16ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்

அதன்பிறகு 10ம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜுலை 2ம் தேதி தொடங்கி ஜுலை 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி ஜுலை 2ம் தேதி முதல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் தேர்வு நடக்கும். ஜுலை 3ம் தேதி ஆங்கிலம் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். ஜுலை 4ம் தேதி கணித பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் ஜுலை 5ம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும், ஜுலை 6ம் தேதி விருப்ப மொழிப்பாடத்துக்கான தேர்வும், ஜுலை 8 சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications