மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளால்.. தமிழகத்திற்கு மேலும் 875 எம்பிபிஎஸ் இடங்கள்
சென்னை: இந்த கல்வியாண்டில் கூடுதலாக 875 எம்.பி.பி.எஸ் இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும். இந்த இடங்கள் மூன்று புதிய தனியார் கல்லூரிகள் உள்பட, ஆறு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து கூடுதலாக கிடைக்கும்.
இதன் மூலம் 26 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3,650 இடங்கள் இருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 52 மருத்துவக்கல்லூரிகளில் 8,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கும்.

தேசிய மருத்துவ ஆணையம் பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள பாரத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இந்த ஆண்டு முதல் 150 மருத்துவ மாணவர்களை அனுமதிக்க ஒப்புதல் அளித்தது. இதேபோல் திருவள்ளூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு 150 இடஙகளில் சேர்க்க அனுமதி வழங்கியது. இதேபோல் கூடுதலாக 150 இடங்களை அனுமதிக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே. முன்னதாக, 150 மாணவர்களை அனுமதிக்க பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்திருந்தது.
இதேபோல் அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் மேலும் 50 இடங்களும், கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி கல்லூரியில் மேலும் 25 இடங்களும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தில் கூடுதலாக 100 இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (சவீதா பல்கலைக்கழகம்) மற்றும் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (மீனாட்சி பல்கலைக்கழகம்) ஆகியவையும் 100 இடங்களை அதிகரிக்க அனுமதி பெற்றுள்ளன. பிஎஸ்ஜி, சவிதா, மீனாட்சி ஆகிய மேற்கண்ட் மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் இனி 250 இடங்கள் இருக்கும்.
இதேபோல் சேலத்தில் உள்ள விநாயக மிஷன்ஷ் கிருபானந்தா வரியார் மருத்துவக் கல்லூரியில் (விநாயகா மிஷன் டீம் பல்கலைக்கழகம்) கூடுதலாக 50 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications