Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் நாளே சட்டசபையில் குழப்பம்.. கவர்னர் வெளியேறிய சில நிமிடங்களில்.. அதிமுக, பாஜக வெளிநடப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதற்கிடையே அதிமுகவினரும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாகச் சொல்லி கோஷம் எழுப்பினர். மேலும், அவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பும் செய்தனர்.

தமிழ்நாடு சட்டசபை இன்றைய தினம் காலை கூடியது. ஆளுநருக்கு மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க வேண்டும்.

Tamil Nadu Assembly Session Tamil Nadu RN Ravi Politics

இருப்பினும், ஆளுநர் இந்தாண்டும் தனது உரையை வாசிக்கவில்லை. தமிழ் தாய் வாழ்த்தோடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதிய கீதம் பாடப்படவில்லை எனச் சொல்லி ஆளுநர் உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போல இப்போது மீண்டும் நடந்து கொண்டுள்ளார். அரசமைப்பை ஆளுநர் மீறியுள்ளார். உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதைச் சட்டப்பேரவை ஏற்கவில்லை. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் உரையோடு அவை தொடங்க வேண்டும் என்ற பேரவை விதியை அரசமைப்பில் திருத்த முயல்வோம் என்றும் பேரவை விதியை அரசமைப்பில் திருத்தும் வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பான அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர பிற மாநிலக் கட்சிகளோடு சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் உரை பேசியதாகக் கருதி நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் மசோதாவை முன்மொழிந்தார். அந்த மசோதா ஏற்கப்பட்டது. அப்போது அதிமுகவினர் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாகச் சொல்லி கோஷம் எழுப்பினர். அதிமுகவினரை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேறினர். மேலும், அவை வளாகத்தில் அமளியிலும் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+