ஏப்ரல் 30 வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! வெளியானது அட்டவணை!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 17 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகள் பலவும் கவனம் பெற்றுள்ளன.

அதேசமயம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை எல்லாம் வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்றும், தேர்தலை ஒட்டிய பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் தமிழக அரசின் புதிய பட்ஜெட்டை விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் என்று அறிவித்தார்.
மார்ச் 17 முதல் 5 நாள்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறும். மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரல் வருமாறு:
மார்ச் 15 - வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
மார்ச் 17 - இரங்கற் குறிப்புகள், இரங்கல் தீர்மானம்
மார்ச் 18 - நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் இரண்டாம் நாள்
மார்ச் 19 - நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் மூன்றாம் நாள்
மார்ச் 20 - நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நான்காம் நாள்
மார்ச் 21 - முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவை முன் வைத்தல்; கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளித்தல்; வாக்கெடுப்பு, சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல், நிறைவேற்றுதல்
மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும்
மார்ச் 24 - நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை
மார்ச் 25 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
மார்ச் 26 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
மார்ச் 27 - திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை; இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை; சிறப்பு திட்ட செயலாக்கத்துறை
மார்ச் 28 - கதர் கிராம தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்; வனம்; கைத்தறி மற்றும் துணிநூல்
ஏப்ரல் 1 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை; கட்டடங்கள்
ஏப்ரல் 2 - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை; கால்நடை பராமரிப்பு; மீன்வளம் மற்றும் மீனவர் நலன்; பால்வளம்
ஏப்ரல் 3 - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை; இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு
ஏப்ரல் 4 - நீதி நிர்வாகம்; சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்
ஏப்ரல் 7 - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
ஏப்ரல் 8 - கூட்டுறவு; உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
ஏப்ரல் 9 - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
ஏப்ரல் 15 - செய்தி மற்றும் விளம்பரம்; எழுதுபொருள் மற்றும் அச்சு; தமிழ் வளர்ச்சி; மனிதவள மேலாண்மை துறை
ஏப்ரல் 16 - மாற்று திறனாளிகள் நலத்துறை; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
ஏப்ரல் 17 - சுற்றுலா; இந்து சமய அறநிலையத்துறை
ஏப்ரல் 21 - எரிசக்தித் துறை; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
ஏப்ரல் 22 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
ஏப்ரல் 23 - வணிக வரிகள்; முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு; இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம்; போக்குவரத்து துறை
ஏப்ரல் 24 - உயர்கல்வித் துறை; பள்ளிக் கல்வித்துறை
ஏப்ரல் 25 - தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை; தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
ஏப்ரல் 26 - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
ஏப்ரல் 28 - பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல், நிதி, ஓய்வூதியங்கள்
ஏப்ரல் 29 - காவல்; தீயணைப்பு
ஏப்ரல் 30 - காவல்; தீயணைப்பு (தொடர்ச்சி)












Click it and Unblock the Notifications