நீட் விலக்கு.. தமிழக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் நேற்று முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெளியான முடிவுகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தச் சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நீட் விலக்கு சட்ட மசோதா குறித்துப் பேசப்பட்டதாக ஆளுநர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப். 14ஆம் தேதி நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டசபையில் சட்ட மசோதா இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஆளுநரை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்.
நீட் விலக்கை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திலும் கூட நீட் விலக்கை திமுக ஒரு வாக்குறுதியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை மற்றும் திமுக எம்பிகள் தொடர்புடைய வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.