கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது எந்த அரசு? முதல்வர் மு.க.ஸ்டாலின் சுளீர் விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது மத்திய அரசா? மாநில அரசா? என்ற சர்ச்சைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு நடத்திய விழாவில் கலந்து கொண்டதாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு அரசு நடத்திய விழாவில் ஏன் காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
சென்னையில் அண்மையில் கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் மற்றும் தமிழ்நாட்டு பாஜக தலைவர் என பலரும் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்களை அழைத்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது சர்ச்சையானது.

இது தொடர்பாக அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்திய விழாவில் ஏன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி அழைக்கப்படவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் பா.ஜ.க-வுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்ன போது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை தி.மு.க. முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன் எனவும் கூறினார்.
இதற்கு திமுக தரப்பில், மத்திய அரசுதான் இந்த விழாவை நடத்தியதாக விளக்கம் தரப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசு அழைத்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்திருந்தனர். இதனால் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்தியது என விளக்கம் அளித்தார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications