தமிழக அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காமராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் பல லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டாலும் அதில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவிற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் எம்எல்ஏக்களில் முதன்முதலாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலோபர் கபீல் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். மொத்தம் 16 எம்.எல்.ஏக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications