பெரும்பாக்கத்தில் இனி கடினம் .. பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. தமிழக அரசுக்கு மிகப்பெரிய உத்தரவு
சென்னை: சென்னையில் ஒரு காலத்தில் சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை, இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், நெரிசல் மிகுந்த சாலைகளாகவும், ஏராளமான வீடுகளுடன் கூடிய நகரமாகவும் மாறி உள்ளது. தற்போது இருக்கும் நீர் நிலைப்பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பது, கட்டுமானம் அமைப்பதும் நடப்பதாக புகார்கள் உள்ளது. இது தொடர்பான வழக்கில், பள்ளிக்கரணையில் சதுப்பு நில பகுதியில் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாக்கம் சோழிங்கநல்லூரை ஒட்டியிருக்கிறது. இது சதுப்புநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். மேலும் பாதி ஊரே சதுப்பு நிலத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக
பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன.

இந்நிலையில் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்காக பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் சாலை அமைக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில், கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் சென்னையின் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தென்னிந்திய தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல காரணங்களால் சென்னையின் சதுப்பு நிலப்பகுதிகள் மிகவும் சுருங்கி விட்டது. எனவே தற்போது எஞ்சியிருக்கும் சதுப்பு நில பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ராம்சர் சதுப்பு நில கணக்கெடுப்பு மற்றும் ராம்சர் தளத்தை பராமரிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நீர்வளத்துறை, மாநில சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் இறுதி செய்யப்படும் வரை, தமிழக மாநில சதுப்பு நில ஆணையம் சென்னையின் கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தின் இப்பகுதியை அறிவியல் ரீதியாக தீர்மானிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது. தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்குவதை கருத்தில் கொள்ளும்போது, ராம்சர் பகுதிகளை பராமரிக்கும் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications