Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும்பாக்கத்தில் இனி கடினம் .. பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. தமிழக அரசுக்கு மிகப்பெரிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு காலத்தில் சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை, இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், நெரிசல் மிகுந்த சாலைகளாகவும், ஏராளமான வீடுகளுடன் கூடிய நகரமாகவும் மாறி உள்ளது. தற்போது இருக்கும் நீர் நிலைப்பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பது, கட்டுமானம் அமைப்பதும் நடப்பதாக புகார்கள் உள்ளது. இது தொடர்பான வழக்கில், பள்ளிக்கரணையில் சதுப்பு நில பகுதியில் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாக்கம் சோழிங்கநல்லூரை ஒட்டியிருக்கிறது. இது சதுப்புநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். மேலும் பாதி ஊரே சதுப்பு நிலத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக
பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன.

Tamil Nadu government should not give approval for constructions in Pallikaranai swamp area

இந்நிலையில் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்காக பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் சாலை அமைக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில், கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் சென்னையின் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தென்னிந்திய தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல காரணங்களால் சென்னையின் சதுப்பு நிலப்பகுதிகள் மிகவும் சுருங்கி விட்டது. எனவே தற்போது எஞ்சியிருக்கும் சதுப்பு நில பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ராம்சர் சதுப்பு நில கணக்கெடுப்பு மற்றும் ராம்சர் தளத்தை பராமரிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நீர்வளத்துறை, மாநில சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் இறுதி செய்யப்படும் வரை, தமிழக மாநில சதுப்பு நில ஆணையம் சென்னையின் கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தின் இப்பகுதியை அறிவியல் ரீதியாக தீர்மானிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது. தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்குவதை கருத்தில் கொள்ளும்போது, ராம்சர் பகுதிகளை பராமரிக்கும் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+