இந்த மாதமே கிளியர் பண்ணுங்க.. முதல்வர் போட்ட உத்தரவு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு வரும் அரியர்!
சென்னை: நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) உயர்வு அரியர் தொகையை வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள மே மாத சம்பளத்தோடு சேர்த்து அரியர் தொகை வங்கி கணக்குகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிலுவையில் உள்ள மாதங்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதுவரை நீங்கள் வாங்கிய டிஏ, இனி வாங்க போகும் டிஏ இடையிலான வேறுபாடு ஆகியவற்றை வைத்து டிஏ நிலுவைத் தொகை கணக்கிடப்படுகிறது.

DA நிலுவைத் தொகை = (புதிய DA % - பழைய DA%) × அடிப்படை ஊதியம் × மாதங்களின் எண்ணிக்கை
பின்வரும் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
அடிப்படை ஊதியம்: ₹35,400
DA உயர்வு: 4%
மாதங்கள்: 4 (ஜனவரி முதல் ஏப்ரல் வரை)
எனவே அரியர் நிலுவைத் தொகை = 0.04 × ₹35,400× 4 = ₹5,664 இந்த எளிய கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பணியாளரும் தங்கள் சொந்த அரியர் தொகையைக் கணக்கிடலாம்.
ஜூன் மாதம் வழங்கப்பட உள்ள மே மாதத்திற்கான சம்பளத்தில் இந்த அரியர் பணம் வழங்கப்படும். நாடு முழுக்க 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மத்திய அரசின் இந்த பணம் வழங்கப்படும்.
எப்போது வழங்கப்படும்?
புதிய டிஏ விகிதத்துடன் திருத்தப்பட்ட சம்பளத்தில் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முந்தைய மாதங்களுக்கான (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) நிலுவைத் தொகையும் மே 2025 இல் மொத்தத் தொகையாக வழங்கப்படும்.
DA உயர்வு அமலுக்கு வரும்: ஜனவரி 1, 2025 திருத்தப்பட்ட சம்பளம்: மே 2025 வழங்கப்படும்
நிலுவைத் தொகை: மே 2025 வழங்கப்படும்
டிஏ உயர்வின் முக்கிய சிறப்பம்சங்கள்:
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 55% ஆக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்த 2% டிஏ உயர்வு கடந்த 78 மாதங்களில் மிக மிக குறைவானது. ஆனால் இப்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பணவீக்கத்தில் மேலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. பணவீக்கத்தை வைத்தே அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படும். 8.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்
யாருக்கு பலன் கிடைக்கும்
இந்த முடிவு பல்வேறு துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பலன் அளிக்கும்.. பயனாளிகளின் பட்டியல் இதோ:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (குரூப் ஏ, பி, சி) ஆசிரியர்கள், மற்ற பணியாளர்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்
பாதுகாப்பு சேவைகளில் சிவில் ஊழியர்கள்
மாநில அரசின் ஊதியக் கட்டமைப்பின் கீழ் தன்னாட்சி அமைப்பு ஊழியர்கள். இதனால் சம்பளம் 720 முதல் 3150 ரூபாய் வரை ஊழியர்களுக்கு சம்பளம் உயரும்.
சம்பளம் உயர்வு
2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும்.
7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications