சென்னை கோயம்பேட்டில் ஸ்கைவாக்.. அதுவும் இந்த இடத்திலேயா.. பயணிகளுக்கு விரைவில் பெரிய நிம்மதி
சென்னை: சென்னை கோயம்பேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய ஸ்கைவாக் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஜவஹர்லால் நேரு சாலை - பூந்தமல்லி சாலை இடையே ரூ.18 கோடியில் இந்த ஸ்கைவாக் அமைய உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது, யூ டேர்ன் பாலங்கள் அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதுபோக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் நடை மேம்பாலங்களும் அமைக்கப்படுகின்றன. ஸ்கை வாக் எனப்படும் ஆகாய நடை மேம்பாலங்களும் நெரிசல் மிகுந்த இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் சாலையை எளிதில் கடக்க முடிகிறது. தி.நகர் ஸ்கைவாக் கட்டிய பிறகு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில்வே நிலையத்திற்கு எந்த சிரமும் இன்றி பயணிகள் சென்று வர முடிகிறது.
முன்பெல்லாம் தி.நகர் கூட்ட நெரிசலில் சிக்கி வியர்க்க விறுவிறுக்க நடந்த சூழலில் கடந்த 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நடை மேம்பாலம் மூலம் பயணிகள் எளிதாக சென்று வர முடிகிறது. இந்த நிலையில் தான் சென்னையின் மற்றொரு மிக முக்கியமான பகுதியாக விளங்கும் கோயம்பேட்டில் ஸ்கை வாக் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
ஜவர்ஹர்லால் நேரு சாலை - பூந்தமல்லி சாலை இடையே ரூ. 18 கோடி செலவில் இந்த ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்கை வாக் மூலம் தேமுதிக அலுவலகம் அமைந்துள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து எம்.டிசி பேருந்து நிறுத்தம் இணைக்கப்பட உள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பது போன்று இருபுறமும் தானியங்கி லிப்ட் வசதிகளுடன் ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஸ்கை வாக் பயன்பாட்டுற்கு வந்த பிறகு சாலையை சிரமம் இன்றி கடந்து செல்ல முடியும் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே நெருக்கடியான இந்த இடத்தில் ஸ்கைவாக் அமைக்கும் முடிவுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். அதேவேளையில் ஸ்கைவாக் கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பது வாகன ஓட்டிகள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications