தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி இருக்கு.. பீலா ராஜேஷ் சொன்னதை பாருங்க
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 102 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
நேற்று வரை 309 நோயாளிகள் இருந்த நிலையில், இன்று 102 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஆக மொத்தம் 411 நோயாளிகளுக்கு தமிழகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நோயாளி எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு, தமிழகம் முன்னேறி உள்ள போதிலும், ஒரு நல்ல செய்தியும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

பேட்டி
பீலா ராஜேஷ் பேட்டியை பாருங்கள்: தமிழகத்தில் பாசிட்டிவ் கேஸ்களில் இதுவரை ஒரே ஒரு இறப்புதான் பதிவாகி உள்ளது. மற்றபடி நோயாளிகள் அனைவருமே நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்கள். யாருக்குமே ஐசியூ சிகிச்சை கூட தேவையில்லை. எனவே இது பயப்படக்கூடிய ஒரு நோய் கிடையாது. நோய்த்தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி தக்க நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பு கிடையாது.

28 நாட்கள்
28 நாட்கள் வெளித் தொடர்பு இன்றி தனிமைப்படுத்திக் கொள்வது இந்த நோய் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு உதவும். தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள். தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டாம்.

சமூக பரவல் இல்லை
சமூக பரவல் என்ற நிலை ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில்தான் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை சோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துவிட்டால் மறுபடி பாசிட்டிவ் என்று வராது என்று அர்த்தம் கிடையாது. மறுநாளே கூட பாசிட்டிவ் ஏற்படலாம். எனவேதான் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பதற்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி வருகிறோம்.

பாதுகாப்பு
நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்டு வந்து விட்டால் உங்களுக்கு இந்த நோய் வரவே வராது என்று அர்த்தம் கிடையாது. எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதுதான் இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும். தமிழகத்தில் இந்த ஆய்வு என்பது ஜனவரி 18ம்தேதி முதலிலேயே தொடங்கிவிட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதும், நோயாளிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதும், இந்த பேட்டியின் முக்கிய அம்சங்கள், மகிழ்ச்சியான செய்திகள்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications