ஒரு வாரத்திற்கு மளிகை, காய்கறிகள் கடைகள் இயங்காது.. நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விநியோகம்
சென்னை: நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 24 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் அது கட்டுக்குள் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறதால் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமலாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் மே 24 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்தில் காய்கறிகள், மளிகைக் கடைகள், பழங்கள் இயங்காது.
பால், மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்து கடைகள் இயங்க அனுமதிக்கப்படும். இந்த ஒரு வார காலகட்டத்தில் சென்னையில் தோட்டக் கலையுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியுடன் இணைந்து காய்கறிகள் விநியோகிக்கப்படும். இன்று இரவு 9 மணி வரையும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications