3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. சென்னை சைபர் கிரைம் பிரிவுக்கு புதிய துணை ஆணையர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அதன்படி சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில்,

"சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிவீர பாண்டியன் மாநில நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முத்தரசி ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 57 துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications