Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்துகள் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ஆபீஸுக்கு இனி போக தேவையில்லை! இதோ பதிவுத்துறை புதிய வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமைப் பத்திர வைப்பு (MOD) எனப்படும் கடனுக்கான பிணையம் மற்றும் 3.5 லட்சம் ரசீது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன... இப்படிப்பட்ட சூழலில், சொத்துக்கள் பதிவதில், புதிய நடைமுறையை தமிழக பதிவுத்துறை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இந்த புதிய ஆளில்லா பத்திரப் பதிவுக்கான செயல்முறையை மாநிலப் பத்திரப்பதிவுத் துறை உருவாக்கி வருவதையடுத்து இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்த போவதாகவும் தெரிகிறது.

சொத்து உள்ளிட்ட பத்திரப்பதிவு விவகாரங்களை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், ஆன்லைன் வசதியை அரசு கொண்டுவந்துள்ளது.. எனினும், சொத்துக்களை பதிய வேண்டுமானால் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத்தான் நேரடியாக செல்ல வேண்டியிருக்கிறது.

property registrations presenceless Tamil Nadu s registration department

பதிவுத்துறை - சார் பதிவாளர் அலுவலகங்கள்

சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்துமே பதிவுத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.. நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சொத்து விற்பனை மட்டுமல்லாது, பத்திரப்பதிவு, பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் என அனைத்து விதமான நில விவகாரங்கள், சொத்து விவகாரங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகம்தான் செல்ல வேண்டியிருக்கிறது..

சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 26,000 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன, இந்த லிஸ்ட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

பிரசன்ஸ்லெஸ் முறை

இப்படிப்பட்ட சூழலில், சொத்துப் பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்கும்படியான திட்டத்தை அரசு விரைவில் கொண்டு வரப்போகிறது.. இதன்மூலம், வாங்குபவர்களும், டெவலப்பர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு (Sub-Registrar Offices - SRO) நேரடியாக செல்லாமல், தங்கள் சொத்துகளை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ள முடியும்... எனவே, புதிய சொத்து விற்பனைப் பதிவுகளுக்கு முதற்கட்டமாக 'பிரசன்ஸ்லெஸ்' (Presenceless) எனப்படும் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

விற்பனையாளர்கள், டெவலப்பர்கள்

அதாவது, விற்பனையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள், தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வார்கள். சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள், அந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்த்து, ஆன்லைனிலேயே சட்டரீதியான அங்கீகாரம் வழங்குவார்கள். எனவே, கட்டிடத் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பயோமெட்ரிக் சாதனங்களை இனி பயன்படுத்துவது கட்டாயமாகும்.

இந்த புதிய வசதி மூலம் அலுவலக நெரிசல் குறைந்து, பொதுமக்களின் நேரம் மிச்சமாகும்.. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்யும் சிரமம் முற்றிலும் குறையும்.. ஊழல்கள் கட்டுக்குள் வரும்.. தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும்.. பதிவுத்துறையின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், இது மக்களின் நம்பக்கத்தன்மையும் உறுதிசெய்யும்.

பலன்கள், வசதிகள் என்னென்ன

அதுமட்டுமல்ல, இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான கைரேகை மற்றும் கண்புகை (Iris) சோதனை இணைக்கப்பட உள்ளதால், போலி ஆவணங்களுக்கும் இடமில்லை, மோசடிகளுக்கும் இடமில்லை, இரட்டை விற்பனைகளுக்கும் இடமில்லை. ஒரே சொத்தை ஒருவருக்கு விற்றுவிட்டு மீண்டும் வேறொருவருக்கு விற்பனை செய்யும் குழப்பங்கள் நீங்கும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் மூலம் சிறிய முதலீட்டாளர்கள், வீட்டை வாங்கும் குடும்பங்கள், டெவலப்பர்கள், வங்கிகள் என அனைத்து தரப்புக்குமே வெற்றியை தரும் திட்டமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+