“எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..” சென்னை மக்களுக்கு பறந்த SMS! அலர்ட் கொடுத்த தமிழக அரசு!
சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், மழை தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எஸ்எம்எஸ் மூலமாக அறிவுறுத்தியிருக்கிறது.
அதில், "டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும். பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள், மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம். மாவட்ட நிர்வாகம் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தினால் ஒத்துழைக்கவும். விழுந்த மின் கம்பிகள், ஈரமான மின் சாதனங்களைத் தொடாதீர்கள்" என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "இந்த புயல் சென்னையில் கரையை கடக்காது. சென்னையை ஒட்டி வந்து, ஆந்திரா பக்கம் நெல்லூர் பக்கம் சென்று கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். நாளை கனமழையாக கூட பெய்யலாம். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெளியே வர வேண்டாம். புயலால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது. புயல் அறிவிப்பு வந்த உடனேயே முதலமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க 5 கிலோ பாக்கெட்டுகளாக 5 லட்சம் கிலோ அரிசி பாட்கெட்டுகள் தயார் நிலையில் இருக்கின்றன. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டில் தற்போது வரை டிட்வா புயல் காரணமாக எந்த உயிரிழப்புகளும் இல்லை. 13 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 1058 பேர் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயலால் ஒரு உயிரிழப்பு கூட இருக்க கூடாது. அந்த வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியிருந்தார்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications