“எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..” சென்னை மக்களுக்கு பறந்த SMS! அலர்ட் கொடுத்த தமிழக அரசு!
சென்னை: டிட்வா புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், மழை தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எஸ்எம்எஸ் மூலமாக அறிவுறுத்தியிருக்கிறது.
அதில், "டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும். பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள், மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம். மாவட்ட நிர்வாகம் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தினால் ஒத்துழைக்கவும். விழுந்த மின் கம்பிகள், ஈரமான மின் சாதனங்களைத் தொடாதீர்கள்" என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "இந்த புயல் சென்னையில் கரையை கடக்காது. சென்னையை ஒட்டி வந்து, ஆந்திரா பக்கம் நெல்லூர் பக்கம் சென்று கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். நாளை கனமழையாக கூட பெய்யலாம். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெளியே வர வேண்டாம். புயலால் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது. புயல் அறிவிப்பு வந்த உடனேயே முதலமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க 5 கிலோ பாக்கெட்டுகளாக 5 லட்சம் கிலோ அரிசி பாட்கெட்டுகள் தயார் நிலையில் இருக்கின்றன. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டில் தற்போது வரை டிட்வா புயல் காரணமாக எந்த உயிரிழப்புகளும் இல்லை. 13 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு 1058 பேர் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயலால் ஒரு உயிரிழப்பு கூட இருக்க கூடாது. அந்த வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என அறிவுறுத்தியிருந்தார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications