Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநருக்கு எதிரான பேச்சு.. தீர்மான விவாதத்தை புறக்கணித்து சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பியனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேசிய நிலையில் அவர்கள் வெளியேறினர்.

தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போடுவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும் அரசு சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Tamil Nadu Special session to be held today may BJP walked out from assembly

அதாவது தமிழகத்தில் 2021ல் திமுக ஆட்சி அமைந்தது. அதன்பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர்களில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி வருகிறார்.

சில மசோதாக்களுக்கு உடனேயும், சில மசோதாக்களை கிடப்பில் போட்டும் அவர் ஒப்புதல் அளிக்கிறார். இருப்பினும் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழலில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி அலட்சியமாக செயல்படுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

இதற்கிடையே தான் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கால நிர்ணயம் செய்யக்கோரி ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது சமீபத்தில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என கருத்து தெரிவித்தது. அதாவது மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கலாம் இல்லாவிட்டால் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யலாம். மாறாக கிடப்பில் போடுவது கவலையளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது.

இதற்கிடையே தான் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன்பிறகு அதன் மீது விவாதம் என்பது நடந்தது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் அந்த தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இந்த வேளையில் திமுக கூட்டணியி்ல உள்ள கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து தனித்தீர்மானம் மற்றும் ஆளுநர் மீதான விமர்சனத்தை கண்டித்து நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் பாஜகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‛‛சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். திமுக கொண்டு வரும் தீர்மானத்தை பொறுத்து பாஜக வெளிநடப்பு செய்யும்'' என தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
****

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+