Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு.. 'எல்லாரும் நல்லா இருக்கணும்' அதிகாலையிலேயே கோவில்களில் குவிந்த மக்கள்..சாமி தரிசனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு தினம் இன்று தமிழத்தில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக மக்கள் கோவில்களில் குவிந்தனர்.

தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழ்ப் புத்தாண்டு பெரும்பான்மையான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Tamil New Year: People thronged Temples early morning for Special Darshan

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் கோவில்களில் குவிந்தனர். குறிப்பாக வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்ததால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். அறுபடை முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதேபோல் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறந்துள்ள சுபகிருது ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என வேண்டி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சித்திரை புத்தாண்டை ஒட்டி சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார்.

இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. கடற்கரை பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து முருக பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+