தமிழ் புத்தாண்டு.. 'எல்லாரும் நல்லா இருக்கணும்' அதிகாலையிலேயே கோவில்களில் குவிந்த மக்கள்..சாமி தரிசனம்
சென்னை: தமிழ் புத்தாண்டு தினம் இன்று தமிழத்தில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக மக்கள் கோவில்களில் குவிந்தனர்.
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழ்ப் புத்தாண்டு பெரும்பான்மையான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் கோவில்களில் குவிந்தனர். குறிப்பாக வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்ததால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். அறுபடை முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறந்துள்ள சுபகிருது ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என வேண்டி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சித்திரை புத்தாண்டை ஒட்டி சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார்.
இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. கடற்கரை பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து முருக பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications