தமிழ் புத்தாண்டு.. 'எல்லாரும் நல்லா இருக்கணும்' அதிகாலையிலேயே கோவில்களில் குவிந்த மக்கள்..சாமி தரிசனம்
சென்னை: தமிழ் புத்தாண்டு தினம் இன்று தமிழத்தில் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக மக்கள் கோவில்களில் குவிந்தனர்.
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழ்ப் புத்தாண்டு பெரும்பான்மையான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் கோவில்களில் குவிந்தனர். குறிப்பாக வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்ததால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். அறுபடை முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிறந்துள்ள சுபகிருது ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என வேண்டி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சித்திரை புத்தாண்டை ஒட்டி சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார்.
இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. கடற்கரை பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து முருக பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications