அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி.. தெருக்கூத்து.. ஸ்டாலின், கேசிஆர் சந்திப்பு குறித்து தமிழிசை நக்கல்
Recommended Video
சென்னை: எல்லாம் துரைமுருகனால் வந்தது.. அன்னைக்கு ஆர்வ கோளாறால், அதீத பாசத்தால், ஸ்டாலின் ஜனாதிபதியாவார் என்று சொல்லிவிட்டார். இன்றைக்கு அதையே பிடித்துகொண்டு வாரி வறுத்தெடுத்து வருவதுடன், தெலுங்கானா முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது தொடர்பாக ட்வீட் போட்டுள்ளார் தமிழிசை!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மத்தியில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக பினராயி விஜயனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமியையும் சந்திக்க போகிறார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது.
அப்போது இது சம்பந்தமாக பேசிய தமிழிசை, "ஸ்டாலினை சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை என்று சந்திரசேகரராவ் மகளே கூறி உள்ளார். இல்லாத ஒரு அப்பாயிண்மென்ட்டை ஏற்படுத்தி பாஜகவிற்கு சாதகமானது என்று கூறி புறக்கணித்து இருப்பதாக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா இன்று ஆஜராகவில்லை!
திண்ணை பிரச்சாரத்திற்குதான் ஸ்டாலின் நாடகம் ஆடுவார் என்று பார்த்தால், அகில இந்திய அளவிலும் நாடகம் ஆட ஆரம்பித்துவிட்டார். ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்றுதான் துரைமுருகன் சொல்லி உள்ளார். அவரை சொந்த கட்சியினரே கிண்டல் செய்யக்கூடிய நிலை உள்ளது" என்று காட்டமாக கூறியிருந்தார்.
அண்ணன் துரைமுருகன் ஆலோசனைப்படி ஸ்டாலின் 25ஆண்டுகளுக்குப்பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்குப்பின் டில்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு?இங்கே திண்ணை நாடகம்!அடுத்து டில்லியில் கட்சி/அணி மாறிகளின் தெருக்கூத்து??#Namo again sure 2 adore as PM @PMOIndia https://t.co/L3Ejjbl5kR
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 13, 2019
இந்நிலையில்தான், இன்று மாலை 4 மணிக்கு கேஎஸ்ஆர்-ஸ்டாலின் சந்திப்பு நடப்பது உறுதியாகி உள்ளது. இதற்கும் தமிழிசை முதல் ஆளாக வந்து இவர்களின் சந்திப்பை "தெருக்கூத்து" என்று சொல்லி கருத்தை பதிவிட்டு உள்ளார்.
தனது ட்வீட்டில், "திமுக பொருளாளர் துரைமுருகன் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக முதல் கலந்தாய்வு? தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி குதிரைப்பந்தயத்தில் பங்கேற்க அழைப்பு? இங்கே திண்ணை நாடகம்; அடுத்து டெல்லியில் கட்சி / அணி மாறிகளின் தெருக்கூத்து?" என்று விமர்சித்துள்ளார்.