ரஜினிகாந்த் சொன்னது போல் மோடிதான் வலிமையான தலைவர்.. தமிழிசை பேச்சு
சென்னை: ரஜினிகாந்த் சொன்னது போல் பிரதமர் நரேந்திர மோடி வலிமையான தலைவர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. பாஜக சார்பில் மோடியே பிரதமர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ஆலோசனை நடத்த வரும் 23-ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடுகின்றனர். இதற்கான அழைப்பை சோனியா விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் ரஜினிகாந்த் கூறியது போல் பிரதமர் மோடிதான் வலிமையான தலைவர். அதனால் அவருக்கு எதிராக ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் கூடுகிறார்கள்.

ஒப்பு
அவருக்கு இணையான தலைவர்கள் வேறு யாரும் இல்லை. ஒருவரை எதிர்த்து தேர்தல் முடிவுகள் வரும் அன்றைக்கு இத்தனை தலைவர்கள் ஒன்று சேர்ந்து இவர் இருக்கக் கூடாது என முடிவு செய்தால் அவர்கள் எதிர்க்கும் அந்த தலைவர் மோடி எத்தனை பலம் பொருந்தியவர் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்றுதான் தெரிகிறது என்றார் தமிழிசை.

234 தமிழக சட்டசபை
கடந்த மாதம் சென்னையில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது இலக்கு 234 தமிழக சட்டசபை தொகுதிகள்தான் என்றார்.

எதிர்க்கட்சிகள்
மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்கிறதே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என ரஜினியிடம் கேட்டனர். அதற்கு அவர், பத்துபேர் சேர்ந்து ஒருவரை வீழ்த்த வந்தால், அதில் பத்து பேர் பலசாலியா? அந்த ஒருவர் பலசாலியா என்று ரஜினி கேள்வியாகக் கேட்டு மோடிதான் பலசாலி என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications