சொந்த ஊர்னா சும்மாவா.. சேலம் மீது தனிபாசம்.. மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்ட அதிமுக அரசு!
சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று காலை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
இந்த பட்ஜெட் அறிவிப்பில், சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ரூ.6448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எப்படி திட்டம்
நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.5,306 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாயில் உணவு பூங்கா அமைக்கப்படும். 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சேலம், கடலூர், விழுப்புரம், மதுரையில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் தென் மாவட்டங்களில் வேளாண்மை மேம்படுத்தப்படும். வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிகள் அதிகரிக்கப்படும்.

சேலம் ஏன்
சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும். சேலம் மக்களை இந்த அறிவிப்பு அதிக சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சிப்காட் மூலம் சேலம் வேகமாக முன்னேறும். விரைவில் கோவையை சேலம் மிஞ்ச வாய்ப்புள்ளது.

எவ்வளவு திட்டம்
கடந்த மூன்று வருடங்களாக தமிழக அரசு சேலம் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சேலத்தில் தமிழகத்தின் நீளமான டபுள் டக்கர் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆசியாவின் பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரிய டபுள் டக்கர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி காரணம்
தமிழக முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர். இதனால் சொந்த ஊர் மீது அதிக பாசம் கொண்டு இது போன்ற அறிவிப்புகளை அரசு சார்பாக அவர் வெளியிட்டு வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் சேலத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் தனது சொந்த ஊரில் அதிமுக புகழை நிலை நிறுத்த வேண்டும் என்று, முதல்வர் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications