வெளிநாட்டு பயணத்தில் என்ன நடந்தது? எவ்வளவு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.. முதல்வர் அதிரடி விளக்கம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வெளிநாட்டு எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வெளிநாட்டு எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் பெரிய வைரலாகி உள்ளது. லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாடு பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். முதல்வர் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தார் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

என்ன
இந்த நிலையில் தனது வெளிநாட்டு பயணம் குறித்து தற்போது முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், மு.க ஸ்டாலின் சொல்வது அனைத்தும் பொய். நாங்கள் முதலீட்டை ஈர்க்கவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் பேசுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

என்ன பேட்டி
அவர் என்ன முதலீட்டை ஈர்த்தார்?. திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் 26 ஆயிரம் கோடிதான் முதலீடு பெறப்பட்டது. ஆனால் தமிழக அரசின் அதிமுக ஆட்சியின் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது

விளக்க அளித்தார்
ஸ்டாலின் எப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டார். திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னுடைய வெளிநாட்டு பயணத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற போகிறார்கள்.

எவ்வளவு
இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் மிக மிக குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது 4 மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாடு சென்றார். அதன்மூலம் அங்கு முதலீடுகள் அதிகம் செய்யப்பட்டது

தமிழ்கம்
நான் வெளிநாடு சென்ற போது, என்னிடம் தமிழகம் குறித்து வெளிநாட்டு அதிகாரிகள் புகார் வைத்தனர் தமிழக முதல்வர்கள் யாரும் வெளிநாடு வரவேயில்லை, 40 வருடங்களாக தமிழக முதல்வர்கள் வெளிநாடு வரவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள், என்று முதல்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications