4 அவுட்.. 5 இன்.. தமிழக காங்கிரசில் "கை" வைக்கும் ராகுல்.. மொத்தமாக தூக்க முடிவு? வெலவெலத்த கதர்கள்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரசில் முக்கியமான சில நிர்வாகிகளை மாற்றும் திட்டத்தில் டெல்லி மேலிடம் இருப்பதாக கதர் சட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது.
அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம் வர தொடங்கி உள்ளன.
சமீபத்தில் திமுக அரசை இவர் சில இடங்களில் விமர்சிக்கும் வகையில் பேசியதே இந்த விவாதம் எழ காரணமாக அமைந்தது.

மாற்றம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று பேச்சுக்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களாகவே இந்த பேச்சு தமிழ்நாடு அரசியலில் உலவி வருகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் இன்னும் காங்கிரசில் புதிய தமிழ்நாடு தலைவர் நியமிக்கப்படவில்லை. இது டாப் நிர்வாகிகள் பலர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

செயல் தலைவர்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களை மாற்றியமைக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழக காங்கிரசில் தற்போது டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் என 4 செயல்தலைவர்கள் இருக்கின்றனர். இவர்களை மொத்தமாக "தூக்கிவிட்டு", புதிதாக 5 செயல்தலைவர்களை நியமிக்க ராகுல்காந்தி ஆலோசித்துள்ளார். நிர்வாகிகள் மாற்றம் என்பதை அறிந்து வெலவெலத்து போன தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களின் வாரிசுகளை அப்பதவிக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

கோஷ்டி
கோஷ்டி கோஷ்டியாக நிர்வாகிகள் மாறி மாறி இதற்காக நகர்த்தி வருகின்றனர். பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் இந்த பதவியை பெறுவதிலும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் இப்பதவியைக் கைப்பற்ற டெல்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், வாரிசுகள், தேர்தலில் இதற்கு முன்பு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் என யாருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது என்று கட்சிக்கு உள்ளே கலக்க குரல்கள் கேட்க தொடங்கி உள்ளதாம்.

புதியவர்கள்
புதியவர்களுக்கும் இதுவரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதவர்களுக்கும் தான் செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியில் வாய்ப்பு கிடைக்காத கதர் சட்டை நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகின்றனர். இது குறித்த தங்களின் குரலை காங்கிரஸ் கட்சியின் பல தரப்பினரும் ராகுலிடம் பதிவு செய்து வருகின்றனர். இப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கிறது. அதேபோல் ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை விசாரணை, போராட்டம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார். இந்த பிரச்சனைகள் முடிந்ததும் விரைவில் தமிழ்நாடு காங்கிரசில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications