நிம்மதி! தமிழ்நாட்டில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. உயிரிழப்புகளும் இல்லை
சென்னை: கடந்த சில காலமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஒமிக்ரான் கொரோனா காரணமா 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது.
இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் விரைவில் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்வு நிலைக்குத் திரும்பினர்.

தினசரி பாதிப்பு
இதையடுத்து பல வாரங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் கூட வைரஸ் பாதிப்பு சில காலமாகவே கணிசமாக அதிகரித்தது. இருப்பினும், இன்று மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து 2,537ஆகப் பதிவாகி உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
34,469 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் பிரிட்டனில் இருந்து ஒருவர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய இரண்டு பேர் என மொத்தம் 2,537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 35,01,529 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று 18,842ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 18,819ஆக குறைந்து உள்ளது.

உயிரிழப்புகள் இல்லை
அதேபோல இன்று மட்டும் மொத்தம் 2,560 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,44,682ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களைப் போலவே மாநிலத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் நாம் 38028 பேரை கொரோனாவால் இழந்து உள்ளோம்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரே நாளில் சென்னையில் 804 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 434 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 119 பேருக்கும் திருவள்ளூரில் 151 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் இப்போது 8ஆக உள்ளது.
-
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications