தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா.. 25 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தினசரி வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்றைய தினம் தினசரி கேஸ்கள் 25 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிச. இறுதி முதலே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதனால் வரும் பிப். 1 முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினசரி பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தினசரி கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட மொத்தம் 24,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,03,702ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
தினசரி கொரோனா உயிரிழப்பும் 50க்கு குறைவாகவே உள்ளது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 தனியார் மருத்துவமனைகளிலும் 26 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கோவை மற்றும் சேலத்தில் தலா 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,506 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தே வருகிறது. நேற்று 2,11,863 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 2,08,350ஆகக் குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27,885 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,57,846ஆக உயர்ந்துள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
அதேபோல மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் இப்போது 18.3ஆக உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 29%ஆகவும் கோவையில் 26%ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 30% வரை சென்ற போதிலும், கடந்த ஒரு வாரமாக அது குறைந்தே வருகிறது. இன்றைய தினம் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 20ஆக உள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 4508ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கோவையில் தினசரி பாதிப்பு 3309ஆக உள்ளது. மேலும், செங்கல்பட்டு (1614), ஈரோடு(1198), சேலம்(1264), திருப்பூர்(1649) மாவட்டங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் உள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications