சபாஷ் தமிழகம்! 41,000 பேருக்கு இன்று பரிசோதனை.. குறையும் பலி.. பின்னணி இதுதான்!
சென்னை: தமிழகத்தில் வழக்கமாக 34 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று இதுவரை இல்லாத அளவாக 41038 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் டெஸ்டிங் மிக அதிகமாக நடத்தப்படுகிறது.
டெஸ்டிங்கை அதிகரிப்பதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை குறைக்க இயலும்.
எனவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் விரைவாக கண்டுபிடிப்பதன் மூலம் நோயாளிகள் காப்பாற்றப்படுவதும், புதிதாக அவர்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சமூக இடைவெளி
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் போன்றவற்றை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேநேரம் கொரோனா பரவலை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அரசு செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கையாகும். அதை தமிழக அரசு விரைவாக செய்து வருகிறது.

அதிக பரிசோதனை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4231 பேர் தொற்றுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1,26,581 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெஸ்டிங் அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் டெஸ்டிங் என்று பார்த்தால், 42,369 சாம்பிள்கள் டெஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 14,91,783 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசோதனைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அரசு விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் தான் உயிரிழப்பு சதவீதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1,26,581 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 1,765 பேர் தான் இதுவரை இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் என்பதும் அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

சமூக இடைவெளி
கொரோனவை தடுக்க மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இப்படி செய்தால் பலர் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும். இதுவே கொரோனாவை தடுக்க இருக்கும் ஒரே மருந்து.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications