சூப்பர் நியூஸ்..தமிழகத்தில் 25ஆவது நாளாக குறைந்த கொரோனா.. தினசரி பாதிப்பும் 1200க்கும் கீழ் சரிந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 25ஆவது நாளாக வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு தினசரி வைரஸ் பாதிப்பு 1200க்கு கீழ் சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்ட நிலையில், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

இடையில் சில நாட்கள் வைரஸ் பாதிப்பு ஏறினாலும், அதன் பிறகு தொடர்ந்து குறைந்தே வந்தது. கடந்த 25 நாட்களாக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

 தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,88,284 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. தற்போது பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவே உள்ளது. அதிகபட்சமாகத் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.7%. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.6%ஆகவும் உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

 கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

அதேபோல கடந்த சில வரங்களாகவே தினசரி கொரேனா உயிரிழப்புகள் 20க்கும் கீழாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் திருச்சியில் 3 பேரும் தஞ்சையில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில்

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 14,814ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 14,570ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,423 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,37,802 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

 மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 130 பேருக்கும் செங்கல்பட்டில் 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவைத் தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+