"இ பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.." மனித உரிமை ஆணையம் அதிரடி என்ட்ரி! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இபாஸ் நடைமுறையை கட்டாயப்படுத்துவது, மனித உரிமை மீறல்தானே, என்று கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுக்க தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான 7வது ஊரடங்கு சட்ட காலத்தில் இருக்கிறோம். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு காலம் அமலில் இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களில் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ பாஸ் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது.

இ பாஸ் கட்டாயமாம்
அதேநேரம், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பிப்பதற்கு கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் பல மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பணம் கொடுத்தால் இ பாஸ்
இப்படி ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம், சில ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் பணம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாஸ் தயாராகி விடுவதாகவும் அடுக்கடுக்காக புகார்கள் எழுகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சி கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட பாஸ் வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அரசு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவித்தது. இ பாஸ் வழங்க, மாவட்டத்துக்கு தற்போது ஒரு குழு என்றிருப்பது இனிமேல் இரண்டு குழுக்களாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நோட்டீஸ்
இந்த நிலையில்தான் மருத்துவ சேவைகள், கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்று மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகாரை பரிசீலித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மனித உரிமைக்கு எதிரானது
அதில், இ பாஸ் நடைமுறை தொடர்வது என்பது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் அல்லவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும், இ பாஸ் நடைமுறை எதற்காக தொடரப்படுகிறது என்பதற்கும் விளக்கம் கேட்டுள்ளது. நான்கு வார காலத்துக்குள் இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இ பாஸ் ரத்து?
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் ஒரு பக்கம், மனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸ் மறுபக்கம் என, நெருக்கடி, அழுத்தம் அதிகரித்து வருவதால், தமிழக அரசு விரைவில் இ பாஸ் வழங்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
நாய் கூண்டில் 20 சிறுமிகள்... மொத்தம் 700 ஆண்களால் பாதிப்பு! பிரிட்டனை உலுக்கிய பெண்ணின் வாக்குமூலம் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications