தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதா.. ஒப்புதல் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான மசோதாவுக்கும், கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது ஆகிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தார். மசோதாக்களை திருப்பி அனுப்பவும் இல்லை. இதனால் ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்தின் 200வது பிரிவுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை உச்சநீதிமன்றம் சரமாரியாக விமர்சித்திருந்தது. ஆளுநர் மவுனமாக இருக்கலாமா? மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் கனிம வளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த 2 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பழுப்புக்கரி, சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகையான கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கரட்டுக்கல், சரளை, கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகையான சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க இந்த சட்டம் வழி வகை செய்திருக்கிறது. இதன்படி பெரிய வகை கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறிய வகை கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் ஜனவரி 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. அந்த 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளில் தனி அலுவலகர்களை நியமினம் செய்யும் மசோதாகவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications