தொழிலாளர்கள், மாணவர்களிடம் இம்மாத வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை
சென்னை: தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
நாடு முழுக்க லாக் டவுன் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு கூட முடியாமல் போக்குவரத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நிதி பேக்கேஜ் ஒன்றை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதேபோன்று, மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் எங்கு எங்கு தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்கிறார்கள். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், அடுத்த ஒரு மாதத்திற்கான வீட்டு வாடகையை 2 தரப்பினரிடம் வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வாடகை கேட்கக்கூடாது, அது இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, வாடகை கேட்க கூடாது. வாடகை கேட்டு காலிசெய்ய கட்டாயப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு இந்த மாதத்தின் ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும், உரிய காலத்திலும் ஊதியத்தை வழங்குவது கட்டாயம். இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications