முன்னணி கட்சிகளை கலங்கடிக்கும் அறிக்கை.. மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஆதரவு யாருக்கு?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது பற்றிய 'பரபரப்பு' அறிக்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அமைப்பு.
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. எனவே, இப்போது செம 'மப்பாக' அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்.

அதாங்க, டாஸ்மாக்ல மிக்சர் இல்லை, தொட்டுக்க ஊறுகாய் இல்லைன்னு கொந்தளிச்சி காட்டமா அறிக்கைவிடுமே அதே சங்கம்தான்.

அந்த அறிக்கையில், கூறியுள்ளது இதுதான்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் சேரும் எந்த கட்சியுடனும் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சேராது, ஆதரிக்காது.
61.4% டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி சேரும். இல்லையேல், தனித்தே தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அந்த சங்கத்தின் மாநில தலைவர் செல்லப் பாண்டியன் அறிக்கையை வெளியிட்டு கட்சிகளை கலங்கடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications