4%ல் இருந்து 10%த்தை தொட்டுவிட்டோம்.. 2021ல் நடப்பதை பாருங்கள்.. நாம் தமிழர் சீமான் நம்பிக்கை!
நாம் தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது ஆனால் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகளை பெற்றுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நாம் தமிழர் கட்சி வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது ஆனால் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10% வாக்குகளை பெற்றுள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதே சமயம் மக்கள் தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சிக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது.
பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் நாம் தமிழர் பெரிய அளவில் பண பலம் இல்லாமல் தேர்தலை சந்தித்து, அதில் சாதித்துள்ளது. இந்த தேர்தல் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்..

என்ன பேட்டி
சீமான் தனது பேட்டியில், 2021 சட்டசபை தேர்தலை வலிமையாக நாங்கள் எதிர்கொள்வோம். தமிழ் தேசிய இன மக்கள் கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்போம். என் இன மக்களின் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவுகளை எடுப்போம். இன்று அதை பற்றி நான் கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பேன். இன்று பொதுக்குழு நடக்கிறது.

2021 தேர்தல்
2021ல் பெரிய மாற்றம் வரும். 2021ல் போட்டியிடுகிற வேட்பாளர்களை இந்த மாதமே தேர்வு செய்வோம். ஒன்றரை வருடம் தேர்தலுக்கு உழைக்க போகிறோம். எல்லா வேட்பாளர்களும் சாலை சாலையாக சென்று, எல்லா வீடுகளிலும் அடுத்த மாதத்தில் இருந்து பிரச்சாரம் செய்வார்கள்.

பெண்கள்
117 பெண்கள், 117 ஆண்கள் என்று தேர்வு செய்து சமமாக போட்டியிட வைப்போம். பெண்களுக்கு சமமாக வாய்ப்பு அளிப்போம். லோக்சபா தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். சாதி பணம் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்று இருக்கிறோம்.

என்ன வளர்ச்சி
நீங்கள் அதை பார்க்க வேண்டும். கிராமங்களில் எல்லாம் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறோம். எங்களின் வாக்கு சதவிகிதம் 4% ஆக இருந்தது. ஆனால் தற்போது நாம் தமிழர் கட்சி 10% வாக்குகளை பெற்றுள்ளது. நாங்கள் வேகமாக வளர்கிறோம்.

பஞ்சாயத்து தலைவர்
120 பஞ்சாயத்து தலைவர் வென்றுள்ளனர். வார்டு உறுப்பினர்கள் என்று பல இடங்களில் வென்று இருக்கிறோம். அதை யாரும் பேசுவது இல்லை. ஒன்றிய உறுப்பினராக குமரியில் சுனில் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பிவிட்டார்கள்.

திமுக ஏமாற்றம்
மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இதற்கு முன் சிஏஏவை திமுக ஆதரித்தது. 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து திமுக மக்களை ஏமாற்றி உள்ளது, என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications