Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமகதான் 3வது பெரிய கட்சி என்று நிரூபணம் ஆகிவிட்டது.. அதிமுகவிற்கு நன்றி.. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    சென்னை: தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. அதிமுகவும் அதிக இடங்களை அபாரமாக வென்றுள்ளது.

    திமுக, அதிமுகவை அடுத்து தமிழகம் முழுக்க அமமுக, நாம் தமிழர் கட்சிகள்தான் அதிக இடங்களை வென்றுள்ளது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகதான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 36 மாவட்ட ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாமக நன்றாகவே செயல்பட்டுள்ளது.

    நல்ல போய்ட்டு

    நல்ல போய்ட்டு

    இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை விட பாமகவின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்களில் 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றுள்ளது. கட்சி மீது மக்கள் வைத்து இருக்கும் தீவிர ஆதரவை இந்த வெற்றி காட்டுகிறது.

    வேறு என்ன

    வேறு என்ன

    மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறோம். பாமக தொடர்ந்து தமிழகம் முழுக்க வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி அதிக இடங்களை வென்றுள்ளது.

    அதிமுக இடம்

    அதிமுக இடம்

    அதிமுக வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி விழுக்காடு உயரும்.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. இதில் பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவேளை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும்.

    பாட்டாளி மக்கள்

    பாட்டாளி மக்கள்

    திமுகவிற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நடைபெற்று முடிந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    எல்லோருக்கும் நன்றி

    எல்லோருக்கும் நன்றி

    எங்களுக்கு ஆதரவு அளிக்க வாக்காள பெருமக்களுக்கு நன்றி. தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+