பாமகதான் 3வது பெரிய கட்சி என்று நிரூபணம் ஆகிவிட்டது.. அதிமுகவிற்கு நன்றி.. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. அதிமுகவும் அதிக இடங்களை அபாரமாக வென்றுள்ளது.
திமுக, அதிமுகவை அடுத்து தமிழகம் முழுக்க அமமுக, நாம் தமிழர் கட்சிகள்தான் அதிக இடங்களை வென்றுள்ளது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகதான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 36 மாவட்ட ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாமக நன்றாகவே செயல்பட்டுள்ளது.

நல்ல போய்ட்டு
இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை விட பாமகவின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்களில் 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றுள்ளது. கட்சி மீது மக்கள் வைத்து இருக்கும் தீவிர ஆதரவை இந்த வெற்றி காட்டுகிறது.

வேறு என்ன
மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறோம். பாமக தொடர்ந்து தமிழகம் முழுக்க வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி அதிக இடங்களை வென்றுள்ளது.

அதிமுக இடம்
அதிமுக வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி விழுக்காடு உயரும்.

மக்கள் ஆதரவு
உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. இதில் பெரிய வித்தியாசம் இல்லை. ஒருவேளை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும்.

பாட்டாளி மக்கள்
திமுகவிற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நடைபெற்று முடிந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

எல்லோருக்கும் நன்றி
எங்களுக்கு ஆதரவு அளிக்க வாக்காள பெருமக்களுக்கு நன்றி. தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications