உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு: 30 வாக்கு சாவடிகளில் டிச.31-ல் மறுவாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற இடங்களில் 30 வாக்குச் சாவடிகளில் வரும் 31-ந் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வாக்குச் சீட்டுகளில் சின்னங்கள் பொறிக்கப்படாதது, வாக்குப் பெட்டிகளை திருடியது உள்ளிட்ட பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இப்புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய 30 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 30 வாக்குச் சாவடிகளில் வரும் 31-ந் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெற
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் மறுவாக்குப் பதிவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications