மதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர், மதுரை கலெக்டர்கள் மாற்றமும் இதில் அடங்கும்.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட கலெக்டராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் வினய். வருவாய் நிர்வாகண ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஜே.ராதா கிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக செயலாளராக சந்திரமோகன், சுற்றுலா, கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே, ஆற்றல்துறை முதன்மை செயலராக தீரஜ்குமார், நகர்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திற்கு கடந்த 6 மாதங்களில் 4 கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications